காபூல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
காபூல்:
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான்தலைநகரான காபூலில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரிலுள்ள 2 உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீது தீவிரவாதிகள், கடத்தப்பட்ட2 பயணிகள் விமானங்களை மோத வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 110 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில் காபூல் வினான நிலையத்தின் மீது புதன்கிழமை காலை பயங்கரமான ஏவுகணைத் தாக்குதல் நடந்தது.இத்தாக்குதலின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதமதிப்பு குறித்து விவரம் தெரியவில்லை.
அமெரிக்காதான் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், "இந்ததாக்குதலுக்குக் காரணம் நாங்கள்தான்" என்று ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் எதிர்ப்பு அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications