காவிரிப் பிரச்சினை - திமுக வெளிநடப்பு
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்த சில கருத்துக்களுக்கு பதில்அளிக்க சபாநாயகர் காளிமுத்து அவகாசம் கொடுக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில்வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றிற்கு திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்குஅதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி எழுந்து சில கருத்துக்களைக் கூற முயன்றார். ஆனால் அவரைபேச விடாமல் அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "திமுகவுக்கு காவிரிப் பிரச்சினை குறித்து அக்கறை இல்லை. நான்கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.
அதேபோல, டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும் திமுக சார்பில் முக்கியத் தலைவர்களோ அல்லதுஎம்.பியோ கலந்து கொள்ளவில்லை. இதுதான் திமுக தலைமை காவிரிப் பிரச்சினையில் காட்டும் அக்கறையா?"என்று கேட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்துரைமுருகன் எழுந்தார். ஆனால் சபாநாயகர் காளிமுத்து அவருக்குப் பேச அனுமதி மறுத்து நிதியமைச்சர்பொன்னையனை பேச அழைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள், முதல்வர் கூறிய புகாருக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்புதரப்படாததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறி சட்டசபையை விட்டு வெளியேறினார்கள்.












Click it and Unblock the Notifications