மேலும் விமானங்களை கடத்த முயற்சி: 10 பேர் கைது
நியூயார்:
மேலும் விமானங்களைக் கடத்த முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜான் கென்னடி விமான நிலையத்தில் விமானதுக்குள் இருந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கத்திகள்,போலி பாஸ்போர்ட்கள், விமானம் ஓட்டுவதற்கான சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வெரோ பீச் விமானபயிற்சிக் கல்லூரியில் இருந்து இவர்களில் ஒருவர் சான்றிதழ் வாங்கியுள்ளார். இங்கு தான் விமானத்தைக் கடத்திய சிலர் பயிற்சிபெற்றனர் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
இவர்களில் 4 பேர் விமானத்தில் உட்கார்ந்திருந்தபோது சிறப்பு ஆயுதப் படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
உடனடியாக இரு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இந்த நால்வரும் ஓபன் டிக்கெட்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளனர். விமான கிளம்ப சில நிமிடங்கள் இருந்தநிலையில் சிறப்பு அதிரடிப் படையினர் விமானத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் இந்த நால்வரையும் பிடித்தனர். இதனால்விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அஞ்சி நடுங்கினர்.
இந்த நால்வரையும் பிடித்த சில மணி நேரத்திலேயே இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
அதே போல லே கார்டியா விமான நிலையத்திலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகள்,கத்திகள், போலி பைலட் லெசென்ஸ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மேலும் பல விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications