அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தானுக்கு தீவிரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு
இஸ்லாமாபாத்:
பின் லேடனைப் பிடிக்க அமெரிக்காவுக்கு உதவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தானில் உள்ளதீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் அரசை மிரட்டியுள்ளன.
ஆப்கானிஸ்தான் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் தோளோடு தோள் நின்று உதவ வேண்டும். அமெரிக்காவுக்குஎல்லா உதவிகளையும் செய்வோம் என பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளது முதுகில் குத்துவதற்குசமமானது.
இது பாகிஸ்தானின் விவகாரங்களில் வெளிநாட்டை தலையிட அனுமதிப்பது போல் ஆகிவிடும்.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவை எதிர்த்து அனைத்து முஜாகிதீன்களும் போர்தொடுப்போம். ஆப்கானுக்கு உதவுவோம்.
இஸ்லாம் எப்போதும் தீவிரவாதத்தை அனுமதித்ததில்லை. ஆனால், தீவரவாதத்துக்கும் மதப்போருக்கும் உள்ளவித்தியாசத்தை அனைவரும் உணர வேண்டும். மதப் போரில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை யார் தடுத்தாலும்அவர்களைத் தாக்குவோம்.
காஷ்மீர் விடுவிக்கப்படும் வரை மதப் போர் நடக்கும். காஷ்மீரில் மட்டும் தான் மதப் போர் நடத்தி வருகிறோம்.நாங்கள் வேறு எங்கும் போர் நடத்தவில்லை.
இவ்வாறு அந்த வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன்:
அதே போல ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது.
ஹிஸபுல் முஜாகிதீன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவை பாகிஸ்தான் ஆதரிக்கவோ,அவர்களுக்கு உதவவோ கூடாது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களில்அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இப்போது அமெரிக்காவே தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மதப் போர் என்பது ஒருகொள்கைக்காக தொடுக்கப்படுவது. அதில் அப்பாவிகளைக் கொல்ல உரிமையில்லை. ஜிகாத் அமைப்புகள்எப்போதுமே அப்பாவிகளை குறி வைத்தது இல்லை.
ஹர்கத்-உல்-முஜாகிதீன்:
ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளரக் கூறுகையில்,
அமெரிக்காவுக்கு உதவுவதும் சாத்தான்களுக்கு உதவுவதும் ஒன்று தான் என்பதை மட்டும் பாகிஸ்தானுக்கு கூறவிரும்புகிறோம். அதற்கு மேல் ஏற்படும் விளைவுகளை சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும் எனமிரட்டியுள்ளது.
ஆப்கான் பாதுகாப்பு கவுன்சில்:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குல் நடத்த அமெரிக்காவுக்கு எந்த வகையிலாவது பாகிஸ்தான் உதவினால், அது முதுகில் குத்துவதற்கு சமம் எனஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழுவான ஆப்கன் பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான மெளலானாசமீயுல் ஹக் கூறுகையில்,
பாகிஸ்தான் அமெரிக்க போர் விமானங்கள் தனது வானில் பறக்க அனுமதிக்கக் கூடாது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவோம்என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications