பாகிஸ்தான் விமான நிலைய மூடல் ஏன்?
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் சர்வதேச விமான நிலையம் இன்று திடீரென மூடப்பட்டதற்குக் காரணம்தெரியவந்துள்ளது.
மூடப்பட்டிருந்த 6 மணி நேரத்தில் பாகிஸ்தானின் பல்வேறு ஆயுதக் கிடங்குகளில் இருந்து பெரும் அளவிலானஆயுதங்கள் ராணுவ விமானங்கள் மூலம் அங்கு கொண்டு வந்து இறக்கப்பட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் வான் பகுதியைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் இன்னும் பதில் சொல்லவில்லை.
அமெரிக்காவுக்கு உதவினால் தலிபான் ராணுவமும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்பாகிஸ்தானையே தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாகிஸ்தான் பாதுகாப்பைபலப்படுத்தி வருகிறது.
இதற்காக கூடுதல் ஆயுதங்களை நாடு முழுவதும் அனுப்பி வருகிறது. இதற்காககத் தான் இஸ்லாமாபாத்திலும்ராணுவத்தினருக்கும் சிறப்பு ராணுவ விமானங்கள் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் தவிர துருக்கி, தஜிக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியையும் அமெரிக்கா நாடும் என்று தெரிகிறது.ஆப்கானிஸ்தானை 4 பக்கமும் சுற்றி வளைத்துத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க இந்தியாவும் முன் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications