ரஷ்யா, இந்தியா, ஈரான் அதிகாரிகள் ரகசிய கூட்டம்
துஷான்பே (தஜிக்கிஸ்தான்):
ஆப்கானிஸ்தானை ஆளும் இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்களுக்கு எதிரான ரஷ்ய, இந்திய, ஈரான் ஆகியநாடுகளின் அதிகாரிகள் தஜிக்கிஸ்தானில் வியாழக்கிழமை ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அகமத் ஷா மசூத் தலைமையில் போராடி வரும் ஆப்கானிஸ்தானின் போராட்டக் குழுவுக்குரஷ்யா, இந்தியா, ஈரான் ஆகியவை ஆதரவளித்து வருகின்றன. தலிபான் தீவிரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்குடியரசுத் தலைவர் புர்ஹானுதீன் ரப்பாணிக்கு இந்தியா தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.
தலிபான்களை எதிர்த்துப் போராட அகமத் ஷா மசூதுக்கு ரஷ்யா ஆயுதங்கள் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தலிபான் தீவிரவாதிகள் டி.வி. நிருபர்கள் வேஷத்தில் சென்று அகமத் ஷா மசூத் மீது வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவர் தஜிக்கிஸ்தானில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலைமோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தலைமயிலான தலிபான் எதிர்ப்புப் படையின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிட்டது.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க ரஷ்ய, இந்திய, ஈரான், தஜிக்கிஸ்தான் நாட்டுவெளியுறவுத்துறை அதிகாரிகள் ரகசிய கூட்டம் நடத்தினர். தஜிக்கிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நேற்று இக் கூட்டம்நடந்தது.
அமெரிக்காவில் பின் லேடன் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications