சென்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. இதையடுத்து நடந்த கல்வீச்சில் ஒரு பெண் காயமடைந்தார்,2 அரசு பஸ்களுக்கு சேதம் ஏற்பட்டது.

அண்ணாசாலையில் உள்ள தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை படம் பார்க்கச் சென்றிருந்தனர். படம்முடிந்த பின் மாலையில் அவர்கள் எல்.ஐ.சி. பஸ் நிறுத்தம் வந்தனர். அப்போது அங்கு வேறு கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். இந்த இரு கல்லூரி மாணவர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.

இந்தநிலையில் திடீரென இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடு ரோட்டில் அடிதடியில் இரு தரப்பினரும்இறங்கினர். அந்தப் பகுதியே போர்க்களம் போல ஆனது.

மாணவர்களின் மோதல் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்த மோதலில்ஈடுபட்டமாணவர்களைப் பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் நடத்திய கல்வீச்சில் 2 அரசு பஸ்கள் சேதமடைந்தன. குமாரிஎன்ற பெண்ணுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பஸ் கண்டக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவர்கள் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+