சென்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. இதையடுத்து நடந்த கல்வீச்சில் ஒரு பெண் காயமடைந்தார்,2 அரசு பஸ்களுக்கு சேதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் திடீரென இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நடு ரோட்டில் அடிதடியில் இரு தரப்பினரும்இறங்கினர். அந்தப் பகுதியே போர்க்களம் போல ஆனது.
மாணவர்களின் மோதல் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்த மோதலில்ஈடுபட்டமாணவர்களைப் பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் நடத்திய கல்வீச்சில் 2 அரசு பஸ்கள் சேதமடைந்தன. குமாரிஎன்ற பெண்ணுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பஸ் கண்டக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவர்கள் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications