ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.. சென்னை ரயில் நிறுத்திவைப்பு
கோல்கத்தா:
பூரியிலிருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள்தடம் புரண்டன. மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்துநடந்தது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரிகிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 6.20 மணியளவில் கரக்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோதுஅந்த ரயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக ஹவுரா- காரக்புர்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
கவுஹாத்தி- சென்னை எகஸ்பிரஸ், இஸ்பாட் எக்ஸ்பிரஸ், தகுலி எக்ஸ்பிரஸ், ஃபலக்னுமாஎக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் காரக்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கமான ரயில் போக்குவரத்து சனிக்கிழமை மாலை முதல் துவங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications