For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 நாட்களில் 3.15 லட்சம் மனுக்கள்: இது ஜெ. சாதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனது ஆட்சி காலத்தின் முதல் 100 நாட்களிலேயே பொதுமக்களிடமிருந்து 3.15 லட்சம்மனுக்களை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார் என்று அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் சட்டசபையில் கூறினார்.

வெள்ளிக்கிழமை சட்டசபையில் நிதி ஒதுக்கச் சட்ட மசோதாவின் மீதான விவாதத்தின்போது பேசும் போது அவர் கூறியதாவது:

தி.மு.க ஆட்சி செய்த போது 1 வருடத்தில் 2.98 லட்சம் மனுக்கள் மட்டுமேபெறப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.ஆட்சியின் 100 நாட்களிலேயேபொதுமக்களிடமிருந்து 3.15 லட்சம் மனுக்களை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார்.இது முதல்வருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கையே காட்டுகிறது. இது ஒரு சாதனை.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், படிப்பை தொடரமுடியாத ஏழை மாணவ மாணவிகள் 125 பேருக்கு ரூ. 31.40 லட்சம் உதவி தொகையைமுதல்வர் வழங்கினார்.

காவல்துறையால் தாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 31.20லட்சம் வழங்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. இதை தி.மு.க.நிறைவேற்றவில்லை. ஆனால் அதை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.

120 நாட்களிலேயே இவ்வளவு சாதனைகளை செய்துள்ள ஜெயலலிதா 5 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்தால் தங்கள் கட்சியே இல்லாமல் போய்விடும் என்றபயத்திலேயே தி.மு.க. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கிளப்பி வருகிறது என்றார்சுந்தரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X