For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

அமெரிக்காவில் அரேபியர்கள் என தவறுதலாகக் கருதப்பட்டு தாக்கப்பட்டு வரும் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அமெரிக்கா முழுவதும் அரேபியர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடந்துவருகிறது.

சீக்கியர்களின் தாடியும், அவர்களின் தலைப்பாகையான் டர்பனையும் பார்த்து அவர்களை முஸ்லீம்கள் என நினைத்துஅமெரிக்கர்கள் தாக்கி வருகின்றனர். மேலும் மத வழக்கப்படி சீக்கியர்கள் கிர்பான் என்ற சிறிய கத்தியையும் எப்போதும்வைத்திருப்பது வழக்கம். இதையடுத்து சில சீக்கியர்கள் கத்தி வைத்திருந்த காரணத்துக்காக போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களை அடுத்து சீக்கிய தலைவர்கள் பல தொலைக்காட்சிகளில் தோன்றி சீக்கியர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ளவித்தியாசத்தை விளக்கி வருகின்றனர்.

நாங்கள் இந்தியாவில் பஞ்சாப் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் அரேபியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எந்ததொடர்பும் இல்லை என விளக்கம் தந்து வருகின்றனர்.

கிளீவ்லாண்டில் சீக்கிய புனிதத் தலத்துக்கு தீ வைக்கும் முயற்சியும் நடந்தது. சீக்கியர்கள் மீது கல் எறிவது, குப்பையை வீசுவது,கீழே தள்ளிவிடுவது, கெட்ட செய்கை காட்டுவது, தொலைபேசி மிரட்டல்கள் விடுப்பது, தாக்குவது ஆகியவை அதிகரித்துவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X