விலாைசி உயரும்: வாஜ்பாய் எச்சரிக்கை
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தவுள்ள தாக்குதலையடுத்து ஏற்படும்விலைவாசி உயர்வை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார்.
உலக பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்நிலையில், தற்போதுநடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் பதிலடியால் இனி வரும் மாதங்களில்விலைவாசி உயர்வு ஏற்படக்கூடும். அதை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ரூ 30,000 கோடி செலவிட வேண்டியசூழ்நிலையில் உள்ளது. ஒரு பீப்பாயின் விலை 1 டாலர் உயர்ந்தால் கூட நமக்குமேலும் ரூ 3,000 கோடி அதிக செலவாகும். எனவே பெட்ரோலியம் பொருட்களின்விலை உயரும் நிலை உள்ளது. இதை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
வாஜ்பாய் இன்று (சனிக்கிழமை) அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தைகூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிதலைவர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்காவின் மீது தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்புகுறித்தும் விவாதிக்கப்படும்.