நெல்லையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலியில் அகற்றப்பட்ட கடைகளை திரும்பக் கட்டித் தரக் கோரி, நூற்றுக்கணக்கான வியாபாரிகள்தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள திருவள்ளுவர் அடுக்கு மேம்பாலம், கடந்த ஆண்டு பராமரிக்கப்பட்டது. அப்போது,அங்கிருந்த பல கடைகள் அகற்றப்பட்டன.

ஆனால் மீண்டும் இவை வியாபாரிகளுக்குக் கட்டித் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கினர்.

தங்களுக்கு மீண்டும் கடைகள் கட்டித் தரப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இப்போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+