சென்னை விமான நிலைய ரன் வேயில் விரிசல்கள்
சென்னை:
சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சென்னை விமானநிலையத்தின் ஓடுதளத்தை (ரன்வே) இணைக்கும் "டாக்சி வே" பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம்பாண்டிச்சேரியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 என்று பதிவாகியிருந்தது.
இதன் பாதிப்பு சென்னை விமான நிலையத்திலும் காணப்பட்டது. விமான நிலையத்தின் ரன்வேயை இணைக்கும்டாக்சி வே பகுதியில் விரிசல் ஏற்பட்டது.
உடனடியாக, விமான நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.ரன்வேயை விமானிகள் பயன்படுத்த வேண்டாம் என்று விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மற்றவிமான நிலையங்களும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், விமானப் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்படவில்லை. நில நடுக்கம் உணரப்பட்டபோது, விமானநிலையம் வந்த 3 மூன்று விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. சற்று நேரம் கழித்தே, அந்தவிமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.