மகனுடன் சேர்ந்து மாணவியை கடத்தி திருமணம் செய்து வைத்த தந்தை
வாணியம்பாடி:
பள்ளி மாணவியை கடத்திச் சென்று தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்தந்தார். இதையடுத்து தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாகிவிட்ட அவரது இன்னொரு மகனை தேடி வருகின்றனர்.
வேலூர், வாணியம்பாடி, கோணமேட்டில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரதுமனைவி மித்ரா. இந்த தம்பதியின் மகள் தீபதரணி (வயது 15). தீபதரணிஆம்பூர்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
தீபதரணியை அதே பகுதியைச் சேர்ந்த சிகாமணியின் மகன் பிரபு (வயது 21)திருமணம் செய்ய விரும்பினார். இதையடுத்து தனது தந்தை மற்றும் அண்ணனின்உதவியுடன் அந்த மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மாணவயின் தந்தை தர்மலிங்கம் போலீசிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விரிஞ்சிபுரம் போலீசார் சிகாமணியையும்,பிரபுவையும கைது செய்தனர். இதில் தொடர்புடைய பிரபுவின் அண்ணன்கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சிகாமணியும், பிரபுவும் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications