பின்லேடனை ஒப்படைக்க முடியாது: தலிபான் திட்டவட்டம்
துபாய்:
விமானத் தாக்குதலில் பின் லேடனுக்கு தொடர்பிருப்பதாக தகுந்த ஆதாரங்களை காட்டினாலும் கூட அவரைஅமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இதனால் அமெரிக்கா நிச்சயம் ஆப்கானிஸ்தானைத் தாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால் பின் லேடன் தான் காரணம் என்றால் அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என்றுபாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவை வற்புறுத்தின. இந்நிலையில் அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடனின் பங்கு இருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடமும் ரஷ்யாவிடமும் அமெரிக்கா காட்டியுள்ளது.
ஆனால் ஆதாரங்களைக் காட்டினாலும் பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று தலிபான்அரசு இப்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயீப், துபாயில்வெளியாகும "அல்- கலீஜ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
அமெரிக்கத் தாக்குதலில் பின் லேடனின் பங்கு குறித்து தகுந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டாலும், நாங்கள்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்.
அவ்வாறு லேடன் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவரை இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில்தான் விசாரணைசெய்வோம். விசாரணயிைல் அவரது தொடர்பு உறுதி செய்யப்பட்டால், அதன் பிறகு என்ன செய்யலாம் என்றுமுடிவெடுப்போம்.
மேலும் பேச்சுவார்த்தை மூலமாகத் தான் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கமுடியும். போர் என்று ஆரம்பித்தால்அதனால் பாதிக்ககப்படப் போவது அமெரிக்காதான் என்றார்.
இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில், பின் லேடனை மறைத்துவைத்துள்ள தலிபான்களுடன் இனிமேல் ஆலோசனை, பேச்சுவார்த்தைஎன்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications