எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் 22ம் தேதி துவக்கம்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் இந்த மாதம் 22ம் தேதி துவங்குகின்றன என்று அரசுத்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் இந்த மாதம் 22ம் தேதிதொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 3ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுஇயக்குநர் பரமசிவன் கூறியுள்ளார்.
தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிவரை நடைபெறும்என்று கூறியுள்ளார்.
தேர்வு அட்டவணை:
22.10.2001 - தமிழ் முதல் தாள் அல்லது தாய்மொழி (ஓ.எஸ்.எல்.சி. தமிழ் உட்பட)
23.10.2001- தமிழ் இரண்-டாம் தாள் அல்லது தாய்மொழி
24.10.2001- ஆங்கிலம் முதல் தாள்
27.10.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழி தாள் (சமஸ்கிருதம்/ அராபிக் /பாரசீகம்)
29.10.2001- ஆங்கிலம் இரண்டாம் தாள்
30.10.2001- கணிதம்
31.10.2001- அறிவியல்
01.11.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழி தாள் 2 (சமஸ்கிருதம் / அராபிக் /பாரசீகம்)
02.11.2001- சமூக அறிவியல்
03.11.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை சிறப்பு மொழி தாள் 3 ( சமஸ்கிருதம் / அராபிக்/பாரசீகம்)
தேர்வு துவங்கி முதல் 15 நிமிடத்திற்கு பின் வரும் மாணவர்கள் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் விடுமுறை ஏதேனும்அறிவிக்கப்பட்டாலும், அரசுத் தேர்வு இயக்குனரகம் மூலம் மறு அறிவிப்புவெளியிடப்படும் வரை தேர்வுகள் குறிப்பிட்டபடி நடைபெறும் என்றும் அரசு தேர்வுஇயக்குனர் பரமசிவன் கூறியுள்ளார்.