இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு செய்தவர்கள், தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம்இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்றுஇரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வரும் 16 மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழகம்முழுவதும் 4,77,407 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கானகடைசி நாளையொட்டி, இன்று பல வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மதுரை மாநகர மேயர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளரும், தன்னுடையமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று இரவுக்குள்வெளியிடப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.