பிரிட்டிஷ் பிரதமர் இன்று இந்தியா வருகை?
டெல்லி:
பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் திடீர் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருவார் என்றுதெரிகிறது.
ஆனால், காஷ்மீரில் நடந்த கார் குண்டு வெடிப்பையடுத்து இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் டோனி பிளேர் அழைப்பு விடுத்தார்.
கார் குண்டு வெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டதையடுத்து பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுவருத்தத்தைத் தெரிவித்தார். மேலும் தீவிரவாத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவவும் தயார் என்றார்.
இதையடுத்து இப்போது பாகிஸ்தான் செல்லும் வழியில் முதலில் இந்தியா வரவும் அவர் முடிவெடுத்துள்ளதாக பத்திரிக்கைகளில்செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜெர்ரி மெக்ருடன் கூறுகையில், டோனி பிளேரின்வருகை குறித்து உறுதியாகக் கூற முடியாது. தனது பயணத் திட்டத்தில் அவர் கடைசி நிமிடத்தில் கூட மாறுதல் செய்யலாம் என்றார்.
இந்தியாவில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசிவிட்டு அவர் பாகிஸ்தான் செல்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications