தேர்தலுக்குப் பின் த.மா.கா பிளவு நிச்சயம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கு மாற பல த.மா.கா. பிரமுகர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலின்போது மூப்பனாரின் போக்கு பிடிக்காமல் பலதலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். நிச்சயம் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்பட்ட தென்காசி, சேரன்மாதேவி,ராதாபுரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலை தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. ஆனால் இப்போது பிரச்சினை வேறு மாதிரியாக இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 155 வார்டுகளில் தமாகாவுக்கு 39 வார்டுகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்குதான் பிரச்சினை எழுந்தது. அறிவிக்கப்பட்டநான்கு, ஐந்து பேரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் மேலிடத் தலைவர்கள் சிலரின் பரிந்துரையின் பேரில்தான் சீட்கொடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பரிந்துரைக்குப் பின்னணியில் ரூ.2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்குவேண்டியவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டை அவர்களுக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டமேலிடத் தலைவர்கள் பட்டியலில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி, தனுஷ்கோடி ஆதித்தன்,பாரமலை ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே இதுபோல பணத்திற்கு சீட்டை விற்றது துவங்கி விட்டது என தமிழ் மாநில காங்கிரஸின்இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு இந்தத் தலைவர்கள் குறித்துத் தெரியாமல்போய் விட்டதால் ஏமாந்து விட்டார் என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.
இந்த நிலையில், தமாகாவின் முக்கியப் பிரமுகர்களான வடசென்னை தலைவர் ஜோதி, தென் சென்னை தலைவர் விஜயன், மண்டலபிரசார செயலாளர் முனவர் பாட்சா ஆகியோர் கட்சியிலிருந்து விலகி விட்டனர். தாங்கள் கட்சியை விட்டு விலகியதற்கு வாசனைச்சுற்றிலும் உள்ள சில மூத்த தலைவர்களே காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மூப்பானர் மருத்துமவனையில் இருந்தபோது அவரை செயல்பட விடாமல் முடக்கிய இவர்கள் இப்போது வாசனையும் தங்களதுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது கவுன்சிலர் தேர்தலில் சீட் கிடைக்காத சிலர் போட்டி வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துபோட்டியிடுகின்றனர். தேர்தல் முடிந்ததும் அதிருப்தியில் உள்ள பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவ முடிவுசெய்துள்ளதாகவும் அந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications