சென்னையில் திருடர்களைக் கண்காணிக்க ரகசிய வீடியோ கேமராக்கள்
சென்னை:
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் திருடர்களை கண்காணிக்க ரகசிய வீடியோ கேமராக்கள் பல இடங்களில்பொருத்தப்பட்டுள்ளன என்று சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
பிக்பாக்கட் பேர்வழிகள், ஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்கள் ஆகியோரைக் கண்காணிக்கவும், அவர்களைப் பிடிக்கவும்இது உதவும். பெண்களுக்கு அஇது மிகவும் உபயோகமாக இருக்கும். மொத்தம் 6 கேமராக்கள் தற்போது உள்ளன.
இவற்றை ஒரே இடத்தில் இருந்து பார்க்க கண்காணிப்பு பூத்தும் இங்கேயே உள்ளது. மேலும் கமிஷ்னர்அலுவலகத்தில் இருந்தும் இதைகண்காணிக்க முடியும்.
இந்தியாவிலேய முதல் முறையாக ஒரு தெருவுக்குள் கேமாரா பொருத்தப்படுவது சென்னையில்தான் என்பதுகுறிப்பிடத் தக்கது என்றார்.
இந்த கேமரா அமைக்கும் வேலையை ரங்கநாதன் தெருவிலேயே மிகப்பெரிய கடையான சரவணாஸ்டோர்ஸ்ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.