கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா தோல்வி
ஜொகானஸ்பர்க்:
முத்தரப்பு ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 6விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, கென்யா பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள்கிரிக்கெட் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை), வான்டரார் விளையாட்டரங்கில்தொடங்கியது.
துவக்க ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின.
இந்தியா முதலில் பேட் செய்தது. சமீப காலமாக இரட்டை இலக்க ஸ்கோரை அடிக்கவேமிகவும் சிரமப்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கடுமையான விமரிசனத்திற்கும்உள்ளான இந்திய கிரிகெட்அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மிக பிரமாதமாகவிளையாடி 127ரன்கள் குவித்தார்.
வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக இலங்கைக்கு எதிரானபோட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ் மேன்சச்சின் டெண்டுல்கர் 101 ரன்கள் குவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் வழக்கமான அவரது அதிரடி ஆட்ட பாணியை மாற்றிக்கொண்டார். தற்போது இவர் எடுத்துள்ள சதம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர்எடுத்துள்ள 30வது சதமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள்எடுத்தது.
280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா துவக்கம்முதலே சிறப்பாக ஆடியது.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது என்று கூற முடியாது.தென்னாப்பிரிக்காவினர் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சுலபமாக சந்தித்துரன்கைள குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் காரி கிரிஸ்டன் 133 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இறுதியில் 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துதென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications