தமிழர்களைத் தட்டி எழுப்பிய கருணாநிதி
சென்னை:
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்று காங்கிரஸ் ஜனநாயப் பேரவைத்தலைவர் ப.சிதம்பரத்துக்கு கூறியிருப்பதற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில்,
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் அடித்தட்டு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து,தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகமாகும்.
எனவே சிதம்பரம் கூறுவதைப் போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் தமிழர்கள் கொண்டுள்ள பற்றுஎன்றைக்கும் மாறாது, மறையாது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சியை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றுகிருஷ்ணசாமி கூறுவது தவறு. முதலில் கிருஷ்ணசாமியை திமுக சார்பில் பொன்முடி சந்தித்து உள்ளாட்சித் தேர்தல்குறித்துப் பேச்சுநடத்தினார். அதற்கு கிருஷ்ணசாமியிடம் இருந்துதான் பதில் வரவில்லை.
மேலும் எனது உடல்நிலை சரியில்லாததால் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திட்டமில்லை என்றும்அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications