உள்ளாட்சித் தேர்தல்: 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள இடங்களுக்கு 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் மனுக்கள் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும்.

இதையடுத்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் பி.எஸ்.பாண்டியன் இறுதி வேட்பாளர்பட்டியலை அறிவித்தார். அதன்படி மொத்தம் 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது களத்தில்3,75,380 பேர் உள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட முதலாவது வார்டில் மொத்தம் 42 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்திலேயேஅதிகம் பேர் போட்டியிடுவது இங்குதான்.

மதுரை மாவட்டத்தில் மூன்று ஊராட்சி வார்டுகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வார்டு ஆகியவற்றில் வேட்பு மனுஎதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

சோளிங்கர் நகராட்சித் தலைவர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் மூர்த்தி விபத்தில் இறந்து விட்டதால் அங்கு தேர்தல்தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறும் மாநகராட்சி மேயர்களில், சென்னை மேயருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பிறமாநகராட்சிகளுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள்.

கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு நகராட்சி அமைப்புகளுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் ஊரகதேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+