சென்னை மேயர் பதவிக்கு 20 பேர் போட்டி
சென்னை:
சென்னை மாநநகராட்சி மேயர் தேர்தலில் ஐந்து கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள்உள்பட 20 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து, அவற்றை பரிசீலனைசெய்து முடித்து, மனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமைமாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
முழுமையான வேட்பாளர் இறுதிப்பட்டியல் சனிக்கிழமை காலைதான் தெரிய வரும்.சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை மொத்தம் 20 பேர் மேயர் தேர்தலில்போட்டியிடுகின்றனர். இவர்களில் மு.க.ஸ்டாலின் (திமுக), பாலகங்கா (அதிமுக),வசந்தகுமார் (காங்கிரஸ்), மனோகரன் (மதிமுக) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
தேசியவாதி காங்கிரஸ் சார்பில் வள்ளிமைந்தன் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர 15சுயேச்சைகளும் மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மொத்தள்ள 155 வார்டுகளுக்கான தேர்தலில் 1000க்கும் மேற்பட்டவர்கள்போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications