For Daily Alerts
Just In
சென்னை மிட்சுபிசி அலுவலகத்தில் கொள்ளை
சென்னை:
ஜப்பானின் மிட்சுபிசி நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் கொள்ளைஅடிக்கப்பட்டன.
மிட்சுபிசி அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. வியாழக்கிழமை இரவு வாட்ச்மேன் பணியில்இருந்தபோது அவருக்குத் தெரியாமல் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சேப்டி லாக்கரில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும கார் உதிரிபாகங்களையும் திருடிவிட்டுத் தப்பிவிட்டனர். இதுகுறித்து வெள்ளிக்கிழமை காலை தேனாம்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, October 6, 2001, 5:30 [IST]