பதவிக் காலம் முடிந்தாலும் ராணுவத் தலைவராக முஷாரப் நீடிப்பார்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தான் வகித்துவந்த ராணுவத் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் என்றுகூறப்படுகிறது.
இவருக்கு முன்னாள் அந்தப் பதவியை வகித்துவந்த ஜஹாங்கீர் கராமத் என்பவர், அப்போதைய அதிபர் நவாஸ்ஷெரீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜினாமா செய்தார். இதையடுத்து முஷாரப் அந்தப் பதவியில்அமர்ந்தார். பிறகு கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி நவாஸ் ஷெரீப்பின், ஆட்சியை எதிர்த்து ராணுவப்புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தார்.
அப்போது அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இவருக்கு 2 ஆண்டுகள் ராணுவத் தலைமைப் பொறுப்பில் நீடிக்கலாம் என்அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் வரும் 12ம் தேதியுடன் 2 ஆண்டுகள் முடிவடைகிறது.
எனவே முஷாரப் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கலாமா என்று அந்நாட்டு முக்கிய அமைச்சர்கள் மற்றுமதேசியப் பாதுகாப்புக்குழு ஆகியோர் கடந்த புதன்கிழமை கூடி ஆலோசித்தனர். ஆனால் அன்று எந்த முடிவும்எடுக்கவில்லை.
இதற்கிடையில் இன்று அவர் தொடர்ந்து ராணுவத் தலைமைப் பொறுப்பிலும் நீடிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல முன்பு முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக், நாட்டின் பல்வேறு முக்கியப் பதவிகளையும் வகித்துவந்தார்.எனவே இது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல என்று அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ளபேட்டியில் கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications