தமிழகத்தில் கடும் மழை
சென்னை:
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்தது.
சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத்துவங்கிய மழை காலை 9 மணி வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
தென் மேற்குப் பருவ மழை வலுத்து வருவதாலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தமண்டலம் உருவாகியிருப்பதாலும் தமிழகத்தின் பல பகுதிகள், சென்னை,பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் சென்னையில் வானம் இருண்டது.மாலை 5 மணிக்கு மேல் லேசான மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் அரை மணிநேரத்திலேயே அது கன மழையாக மாறியது. தொடர்ந்து பெய்து வந்த மழைஓய்வதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இரவு ழுவதும் மழை பெய்து கொண்டேஇருந்தது.
காலையிலும் மழை நீடித்தது. 9 மணி வரையிலும் மழை நின்றபாடில்லை. கிட்டத்தட்ட14 மணி நேரமாக பெய்து வரும் இந்த மழையால் சென்னை முழுவதும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிகாணப்படுகிறது.
பல இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிலஇடங்களில் சாலையோர மரங்கள் கீழே விழுந்து விட்டன.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (புயல் சின்னம்) உருவாகியிருப்பதால்மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதுமே மிக பலத்த மழை தொடர்ந்து பெய்துவருகிறது












Click it and Unblock the Notifications