காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒழிப்போம்: டோனி பிளேர்
டெல்லி:
காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்து போர் தொடுக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறினார்.
தீவிரவாதத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுக்கவுள்ள போருக்கு இந்தியாவின் ஆதரவுதிரட்ட இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) காலை பிரதமர் வாஜ்பாயைச் சந்த்தித்துப் பேசினார். அப்போது, உலகம் முழுவதும்உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என்றஇந்தியாவின் நிலையைப் பாராட்டினார்.
மேலும் சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலுக்கு கடும்கண்டன்ம் தெரிவித்தார்.
பிறகு பிரதமர் வாஜ்பாயும், பிளேரும் இணைந்து நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பாகிஸ்தான்ஒருபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தருகிறது, மறுபுறம் காஷ்மீரில்எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்பதைப் பற்றிக் கேட்டதற்கு பிளேர்கூறியதாவது,
முதலில் காஷ்மீர் கோரத் தாக்குதலில் பலியானாவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு நாகரீகமான மக்கள் வாழும் நாடுகளில்இடமில்லை. மேலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கூறுகையில்,
தீவிரவாதத்திற்கு எதிரான போரின் போது, சில நாடுகள் தங்கள் நடத்திவரும் தீவிரவாதத்தைக் கொண்டு தங்கள்சொந்த பிரச்சனைகளைத் தீர்க்க முயலலாம். இந்த விஷயத்தில் இந்திய அரசு உஷாராக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பிளேருடன் பேசும்போது, இந்த உலகில் நாடுகளுக்கு இடையிலான தூரமும்,நேரமும் தீவிரவாதத்தைப் பாதுகாக்கும் காரணிகளாக இருக்கமுடியாது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானம் காத்மண்டுவிலிருந்து காண்டகருக்கு கடத்தப்பட்டது. தற்போதுஅதே தீவிரவாதம் அமெரிக்காவில் பெரிய நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டுக்குக்குமே தொடர்புள்ளதுஎன்பதை அமெரிக்கா உணர வேண்டும்.
இதன் மூலம் நாம் ஏன் தீவிரவாதத்தை உலகலாவிய பிரச்சனையாகக் கருதவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.ஒரு இடத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீவிரவாதம் மற்றொரு இடத்தில் பெரியதாகி தனது விஷமத்தைக்காட்டலாம் என்றார்.
இதை பிரிட்டிஷ் பிரதமர் ஆமோதித்தார். மேலும் இருவரும் இஸ்லாத்தையும், தீவிரவாதத்தையும்தொடர்புபடுத்திப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர் ஜஷ்வந்த் சிங், தேசிய பாதுகாப்புக் குழுஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் வெளியுறவுச் செயலாளர் கோகிலா ஐயர் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications