For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை அடுத்து, இந்தியாவிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்த்து பறந்து கொண்டிருக்கின்றன.

டெல்லியிலிருந்து தினமும் அமெரிக்காவிற்கு 4 விமானங்களும், பாரீசுக்கு 3 விமானங்களும் பறந்துகொண்டிருக்கின்றன. வழக்கமாக இவை அனைத்தும் பாகிஸ்தான் வான் பகுதி வழியாகத்தான் பறக்கும்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், பயணிகள் விமானம்தங்கள் நாட்டின் வான் பகுதியைப் பயன்படுத்த எந்தவிதமான தடையையும் பாகிஸ்தான் விதிக்கவில்லை.

இருந்த போதிலும், பாதுகாப்பு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்த்து,அரபிக் கடல் வான் பகுதியைப் பயன்படுத்தி, வளைகுடா வழியாகச் சென்று, தங்கள் பழைய வழிகளைத்தொடுகின்றன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒவ்வொரு விமானமும் ஒரு மணி நேரம் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதையடுத்து,பயணிகளிடமிருந்து அதிக பயணக் கட்டணத்தை வசூலிக்கவும் வேண்டியிருக்கும்.

இதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கா மற்றும் பாரிசுக்குச் செல்லும் விமானங்களும் அங்கிருந்து வரும்விமானங்களும் இனி மும்பை விமான நிலையத்திற்கே இயக்கப்படும் என்று ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதனால், அமெரிக்காவிலிருந்து டெல்லி செல்லும் பயணிகளுக்காக, மும்பையிலிருந்து டெல்லிக்கு வேறு ஒருசிறப்பு விமானத்தை இயக்கும் திட்டத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது.

வார் ரிஸ்க் காரணமாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தொகைகளை உயர்த்தியிருப்பதால், ஒவ்வொருபயணியிடமிருந்தும் 3 முதல் 5 அமெரிக்க டாலர்களை அதிகமாகப் பெறவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X