For Daily Alerts
Just In
கன்னியாகுமரியில் 9,500 பேருக்கு கண்புரை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9,500 பேருக்கு கண்புரை (காட்ராக்ட்) நோய் இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ககந்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9,500 பேருக்கு காட்ராக்ட் பிரச்சினை உள்ளது. இவர்களுக்கு அரசு செலவில்இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சையும் செய்யப்படும்.
இதுதவிர மாவட்டத்தை கண்புரை இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழகத்திலேயே முதல்முறையாக கண்புரை உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியும் துவங்கியுள்ளது என்றார் அவர்.
Comments
Story first published: Monday, October 8, 2001, 5:30 [IST]