புனிதப் போருக்குத் தயாராக இருக்கிறோம்: தலிபான்
காபூல்:
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து, புனிதப் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தானின்தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் மூலமாகவும் கப்பல்கள் மூலமாகவும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதில், காபூல் மற்றும்காண்டஹார் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் முழுவதுமாகச் சேதமடைந்தன. ரேடார் சாதனங்களும்சிதைந்து போயின.
தலிபான் அரசும் இந்தத் தாக்குதல்களை எதிர்நோக்கியே இருந்தது. "புனிதப் போருக்கு நாங்கள் தயாராகஇருக்கிறோம்" என்று அது கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தாக்குதல் என்றும், உலகம் முழுவதும் உள்ளஇஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு அமெரிக்காவிற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தலிபான் அரசுதெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்தான் ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்றும் தலிபான் அரசு அமெரிக்காவுக்குக்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்கியதற்குப் பதிலடி கொடுத்ததில், ஒரு அமெரிக்கப் போர் விமானம் தகர்க்கப்பட்டது என்றுதலிபான் அரசு கூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா இதை மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications