தாவூத் கூட்டாளி சென்னையில் பிடிபட்டானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டாஷகீல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பிற்குப் பிறகு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர்பலியாயினர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தாவூத் இப்ராகிம் இருப்பதாக கூறப்பட்டது. அவரது நெருங்கியகூட்டாளியான சோட்டா ஷகீலும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து சோட்டா ஷகீல் இந்தியாவிலிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடித்துத் தருமாறுஇன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸுக்குத் தகவல் தரப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் சென்னையில் உள்ள செம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் ஒளிந்திருப்பதாக சிறப்புஅதிரடிப்படை போலீஸாருக்கு இன்டர்போல் தகவல் கொடுத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலைசெம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்ததாககூறப்படுகிறது.

பின்னர் பிடிபட்ட ஷகீலை மும்பை போலீசார் விரைந்து வந்து தனி விமானத்தில் அவசர அவசரமாகக் கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் போலீசார் மத்தியிலும் பத்திரிகை நிருபர்கள்மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.

ஆனால், நகர போலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். சோட்டா ஷகீல் இங்குபிடிபட்டதாக வந்த தகவல் தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+