கண் பார்வையை இழந்த பரிதாபம்
சென்னை:
சென்னை புழல் அருகே கோட்டூர் என்ற இடத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் ஒருவர் கண்பார்வையைஇழந்துள்ளார்.
புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு) இந்த பரிதாபச் சம்பவம்நடந்தது.
இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 46க்கும் மேற்பட்டோர் சென்னை அரசு பொது மருத்துவமனைமற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் ரவி என்பவர் உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு கண்பார்வை முழுவதுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அழுதுகொண்டே, "ஏதோ ஒருவித எரிச்சலுடன் என் வயிறுகலங்கிக்கொண்டே இருக்கிறது. மேலும் கண்பார்வை சுத்தமாக இல்லை" என்றார்.
சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் என்னும் வேதிப்பொருள் பார்வைநரம்புகளை பாதித்திருக்கலாம் என்றுமருத்துவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள குறையை நீக்க மருத்துவர்கள் தீவிர சிகிச்சைஅளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications