6 விமான நிலையங்களை மூடியது பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள 6 விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது.

தலிபான்களின் தாக்குலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக மூடுகிறோம் என்று பாகிஸ்தான் அரசு காரணம்கூறியுள்ளது. ஆனால், இந்த விமான நிலையங்களை அமெரிக்கா தனது தாக்குதலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவசதியாகவே மூடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டால் அங்கு பயணிகள் விமானங்கள் இறங்க முடியாது.

இதனால் இந்த விமான நிலையங்களை முழுக்க முழுக்க ராணுவப் பணிகளுக்கா பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி இருக்கும் பாஞ்ச்கர், துர்பெட், ஸோப், தேரா இஸ்மாயில் கான் மற்றும் தேராகாஸி கான் ஆகிய 5 விமான நிலையங்களும், குவெட்டா விமான நிலையமும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

மேலும், பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.எல்லைப் பகுதியில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் யாரும் பாகிஸ்தானுக்குள் வர முடியாத அளவுக்குபாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ள்ளது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி பாகிஸ்தானுக்கு வரும் அகதிகளில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்கள் இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி அளிக்கும் பணியில் சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்புகள்முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+