நகராட்சி கூட்டத்தில் தாமரைக்கனி - அவரது மகன் கடும் மோதல்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் கடைசிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. இன்பத்தமிழனும், அவரது தந்தைதாமரைக்கனியும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி. இவருக்கும் இவரதுமகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழனுக்கும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து கடும் மோதல்நடந்துவருகிறது. தற்போது திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு தாமரைக்கனி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நகராட்சியின் கடைசிக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. கூட்டம் ஆரம்பித்தவுடன்தாமரைக்கனி தீர்மானங்களைப் பற்றி விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இன்பத்தமிழன் எழுந்து, தமிழக அரசு வழங்கிய இலவச வேட்டி, சேலைகளை தாமரைக்கனி பதுக்கிவைத்திருப்பது குறித்து போலீசில் புகார் தரப்பட்டுள்ளதா என்று நகராட்சி இன்ஜினியர் மனோகர சந்திரனிடம்கேட்டார்.

உடனே தாமரைக்கனி குறுக்கிட்டு, மன்றத்தில் எந்தவிஷயம் பேசவேண்டுமானாலும் நகராட்சித் தலைவரிடம்அனுமதிகேட்கவேண்டும் என்று கூறினார்.

அதற்கு இன்பத்தமிழன் கோபமாக, "உன்னிடம் என்னய்யா அனுமதி கேட்பது? எனக்கு அனுமதி தர நீ யார்? நான்எம்.எல்.ஏ. தெரியுமா?" என்று கேட்டார்.

அப்போது திமுக உறுப்பிணர்கள் குறுக்கிட்டு, முதலில் மரியாதையாக் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுஇன்பத்தமிழனை எச்சரித்தனர்.

இருப்பினும் தாமரைக்கனியும், இன்பத்தமிழனும் ஒருவரை ஒருவர் வசைபாடுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்துகடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.

பிறகு கூட்டத்தில் வாசிக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறிவட்டு, கூட்டம்முடிந்துவிட்டது எக்னறு அறிவித்துவிட்டு அவையை விட்டு தாமரைக்கனி வெளியேறினார்.

இந்த் தீர்மானங்களை அதிமுக கவுன்சிலர்கள் தவிர மற்றவர்கள் ஆதரித்துக் கையெழுத்திட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+