ரூ.29 லட்சம் மோசடி செய்த வங்கி மானேஜர் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
தருமபுரி அருகே ரூ.29 லட்சம் கடன் கொடுத்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்த வங்கிமேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அருகேயுள்ளது ராயக்கோட்டை. இங்கு உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளாராக பணிபுரிந்துவருபவர் முத்து.
இவர் வங்கியில் மோசடி செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து தருமபுரிபொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வங்கியில் சோதனை செய்தனர்.
அப்போது, கஸ்டமர்களுக்கு ரூ.29 லட்சம் கடன் கொடுத்துள்ளதாக போலி ஆவணங்களை முத்து தயாரித்து மோசடிசெய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஆவணங்களை கைப்பற்றி முத்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இவர்களிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications