ஆப்கானிஸ்தான் மீது பகல் நேரத் தாக்குதல் தொடர்கிறது
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் பகல் நேரத் தாக்குதலும் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
காண்டஹார் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்கள்நடத்தப்பட்டுள்ளன.
காண்டஹார் விமான நிலையம் இருக்கும் திசையில் 3 பெரும் சத்தங்கள் கேட்டதாகவும், அமெரிக்க விமானங்கள்வீசிய குண்டுகள்தான் இந்தச் சத்தத்திற்குக் காரணம் என்றும் சில காண்டஹார் மக்கள் கூறினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இன்று எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அந்நகரம்இன்று அமைதியாகவே காணப்படுகிறது.
அமெரிக்க விமானங்களின் தாக்குதலால் காபூலில் உள்ள வானொலி ஒலிபரப்புக் கோபுரம் தகர்க்கப்பட்டுவிட்டதால், வானொலி ஒலிபரப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுவதால், காபூல் நகரம் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியேகிடக்கிறது.












Click it and Unblock the Notifications