இந்திய சிறையிலிருந்த 13 இலங்கை மீனவர்கள் விடுதலை
தூத்துக்குடி:
இந்திய கடற்பகுதியில் அத்து மீறி மீன் பிடித்ததற்காக இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 13இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்திய கடற்பகுதியில் அத்து மீறி மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அதே போல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்கள் சில மாதங்கள் கழித்து விடுதலைசெய்யப்படுவார்கள். இது தொடர்கதையாக நடந்து வரும் விஷயம்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இந்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்யவதாக அரசுஅறிவித்திருந்தது.
இதையடுத்து இலங்கை தூதரக முதன்மை செயலாளர் கே.பத்மநாபன் தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன்தூத்குக்குடி மாவட்ட ஆட்சி தலைவர், இந்திய கடலோர காவற்படை கமாண்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின் இலங்கை மீனவர்கள் 13 பேரையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளையும்தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் 13 பேரும் தூத்துக்குடியின் புதிய துறைமுகத்திலிருந்து இலங்கை புறப்பட்டுச்சென்றனர். இவர்கள் அனைவரை-யும் மத்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான அகல்யாபாய்,நாயக்தேவி என்ற கப்பல்கள் அழைத்துச் சென்றன.
இவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையிலிருக்கும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரிடம்ஒப்படைக்கப்படுவார்கள்.