தலிபானிடம் கொடுமைக்குள்ளாகும் பிரான்ஸ், பாகிஸ்தானிய நிருபர்கள்

Subscribe to Oneindia Tamil

பெஷாவர்:

ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட பிரஞ்சு, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களை தலிபான்களும் பொது மக்களும் தெருவில் நிறுத்தி கற்களைஎறிந்துத் தாக்கினர்.

இது உலகம் முழுவதும் பத்திரிக்கை உலகை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

நேற்று பிரஞ்சு நாட்டைதச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மைக்ல்ே பைரார்ட் முஸ்லீம் பெண்களைப் போல புர்ஹா அணிந்து கொண்டு பெண்வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார். ஆனால், தலிபான்களிடம் அவர் பிடிபட்டுவிட்டார்.

இவர் தவிர பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களான முகம்மத் இர்பான், முக்கர்ரம் கான் ஆகிய இருவரும் தலிபான்களிடம் பிடிப்பட்டனர்.

இவர்களை ஜலாலாபாத்தில் தலிபான்கள் தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர். இவர்களுக்கு வலுக்கட்டாயமாக புர்ஹாவையும்அணிவித்தனர். இவர்கள் மீது கல் எரியுமாறு பொது மக்களைத் தூண்டினர். இதையடுத்து தலிபான்களுக்கு பயந்து ஆப்கானியர்கள்இவர்கள் மீது கற்களையும் பாறைகளையும் வீசித் தாக்கினர்.

இவர்களை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும், நாங்கள் தண்டனை தருகிறோம் என்று பொது மக்கள் கேட்கின்றனர் என தலிபான் செய்திநிறுவனம் கூறியுள்ளது.

மூவரும் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானில் நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரஞ்சு பத்திரிக்கையாளர் உளவுபார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டுளளது. இதற்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையே விதிக்கலாம் என தலிபான்கள கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+