"புனிதப் போர்" தொடங்க பின் லேடனுக்கு தலிபான் அனுமதி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
"ஜிகாத்" எனப்படும் புனிதப் போரைத் தொடங்குவதற்கு ஒசாமா பின் லேடனுக்கு விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹாய் முட்மெயின் கூறியுள்ளார்.
1998 முதல் பின் லேடன் தங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அகதி போல வாழ்ந்து வரும் அவருக்கும்செப்டம்பல் 11ல் அமெரிக்க கட்டடங்கள் தாக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அப்துல்தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் புனிதப் போரில் கலந்து கொண்டு, உயிர்த்தியாகம் செய்யத் தயாராக உள்ளனர் என்றும், அமெரிக்க நகரங்கள் மீண்டும் விரைவில் தாக்கப்படக் கூடும்என்றும் பின் லேடனின் அல்-க்வேதா இயக்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications