For Daily Alerts
Just In
உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் தேவை - பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தால் மட்டுமே அவற்றின் உண்மையான நோக்கம்நிறைவேற முடியும் என்று மத்திய இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாம் அதிகாரமே கொடுக்கவில்லை. அதிகாரம் எல்லாம் மாநில அரசுகளின்கையில்தான் புதைந்து கிடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்பட வேண்டுமானால் அவற்றிற்கு முதலில் அதிகாரம் கொடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணி 50 முதல் 60 சதவீதம் இடங்களில் வெற்றி பெறும்என்றார் அவர்.
Comments
Story first published: Wednesday, October 10, 2001, 5:30 [IST]