"ஆசிரியர் வேலை வாங்க பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்"
சென்னை:
பட்டாதாரி ஆசிரியர்கள் தேர்வில் குறுக்கு வழியில் வேலை வாங்க யாரும் முயன்று யாரிடமும் பணம் கொடுத்துஏமாற வேண்டாம் என்று தமிழக ஆசிரியர் தேர்வு வரியத் தலைவர் பிந்துமாதவன் கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 780 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 6ம் தேதிஎழுத்துத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை 75,000 பேர் எழுதினார்கள். இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்பெற்றவர்கள் அடுத்ததாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இவர்கள் யாரும் யாரிடமும் குறுக்கு வழியில் வேலைவாங்குவதற்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றுபிந்துமாதவன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் எழுத்துத் தேர்வின் போதும் தீவிரகண்காணிப்பு போடப்பட்டிருந்ததால் பிட் அடிப்பதற்கும் வாய்ப்பில்லை.
மேலும் விடைத்தாள் திருத்துதல், ஆள்மாறாட்டம் போன்றவை எல்லாம் புதிய முறையில் செய்யப்படுவதால்முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் அவர்கள் பெறும்மதிப்பெண்களை வைத்து கம்யூட்டர் தான் லிஸ்ட்டை தயார் செய்கிறது.
எனவே யாரும் உள்ளே நுழைந்து தனக்கு வேண்டியவருக்கு வேலை வாங்கித் தந்துவிடமுடியாது. இதைவிண்ணப்பதாரர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவுகளை வெளியிடஉயர்நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக நடந்துவரும் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications