பாகிஸ்தான் வந்திறங்கியது அமெரிக்க தரைப்படை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தரைப்படையும் தாக்குதலை விரைவில் தொடங்கவுள்ளது.
சி-130 ரக போக்குவரத்து விமானங்கள் உள்பட 15 விமானங்களில் அமெரிக்க தரைப்படை வீரர்கள் பாகிஸ்தான்வந்து இறங்கியுள்ளனர்.
இதற்காக சில பாகிஸ்தான் விமானத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுஎன்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதற்கட்டமாக பாகிஸ்தானின் ஜாகோபாபாத் விமான தளம் தற்போது அமெரிக்க தரைப்படைக்குஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர பாசானி விமான தளத்தையும் அமெரிக்க தரைப்படையினர் பயன்படுத்தவுள்ளனர்.
ஆப்கானிஸ்தானைத் தாக்கவுள்ள அமெரிக்காவின் தரைப்படைக்கு பாகிஸ்தான் அனைத்து உதவிகளையும் செய்யதயாராக உள்ளது.
இன்றுதான், அமெரிக்க தரைப்படையினர் பாகிஸ்தான் வந்து இறங்கியதாகக் கூறப்பட்ட போதிலும், கடந்த சிலநாட்களாகவே அமெரிக்க விமானங்கள் வந்து சென்தையும், அமெரிக்க வீரர்களின் நடமாட்டத்தையும்பார்த்ததாக ஜாகோபாபாத் மக்கள் தெரிவித்தனர்.
இந்த விமானத் தளத்தைச் சுற்றிலும் பாராமிலிட்டரி படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications