பிளஸ் டூ: அக்டோபர் தேர்வு தேதிகள் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் வரும் 16 மற்றும 18 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால், அந்த 2 நாட்களிலும்நடப்பதாக இருந்த பிளஸ் டூ தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் மதிப்பெண்கள் உயர்த்தும் நோக்கில் தேர்வு எழுதவிண்ணப்பம் செய்திருந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடபெற இருப்பதால் அந்த தேதிகளில்நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
16ம் தேதி நடப்பதாக இருந்த பொருளாதாரப் பாடத் தேர்வு 23ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரைநடைபெறும்.
18ம் தேதி நடைபெறுவதாக இருந்த தத்துவம் மற்றும அனைத்துத் தொழிற்கல்விப் பாடத் தேர்வுகள் 24ம் தேதிகாலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும்.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் பரமசிவன் இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications