For Daily Alerts
Just In
லண்டன் ஹோட்டல் வழக்கு - ஜெ.க்கு இன்று சம்மன் வழங்குகிறார் நீதிமன்ற ஊழியர்
சென்னை:
லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்ற ஊழியர்வியாழக்கிழமை காலை ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று கோர்ட் சம்மனை வழங்குகிறார்.
கோர்ட்டில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஜெயலலிதா வராத காரணத்தால் கோர்ட் ஊழியர்காளமேகம் நேரடியாக ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று சம்மனை வழங்குவார் என்று முதன்மை செஷன்ஸ் நீதிபதிஅசோக் குமார் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். காளமேகத்திற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்என்றும் அவர் உத்தரவு போட்டிருந்தார்.
அதன்படி காளமேகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை போயஸ் கார்டன் செல்கிறார். அங்குஜெயலலிதாவிடம் நேரடியாக சம்மனை வழங்குகிறார். இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]