சென்னையில் கைதான தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்ல சதி
சென்னை:
சென்னையில் கைதான தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் உள்துறை அமைச்சர்அத்வானியைக் கொலைசெய்யத் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது.
சென்னை செம்பியத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிப் படையினர் நடத்திய திடீர் சோதனையில் 2 தீவிரவாதிகள்கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவன் பெயர் சகீல் முமது என்றும் மற்றொருவன் பெயர் ஜாஹிர் என்றும்தெரியவந்துள்ளது. இவர்களில் சகீல் என்பவர் மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சோட்டா ஷகீலுக்குநெருக்கமான சாஜிர் ஷேக் என்பவரின் மைத்துனர் ஆவார். சாஜிர் ஷேக் மும்பை போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜாஹிர் என்பவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.
இவர்கள் இப்போது மும்பை போலீசாரின் பாதுகாப்பின் கீழ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
இவர்களைத் தவிர சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் 6 பேர் மும்பையில் ஜோகேஸ்வரி காலனியில்கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரில் கடந்த 6ம் தேதி அக்பர் உசேன் என்ற தீவிரவாதி கைதுசெய்யப்பட்டுள்ளான்.
இவர்கள் அனைவரையும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியானதாக மும்பை நகர போலீஸ் கமிஷ்னர் எம்.என்.சிங் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
கைதான அனைவரும் சோட்டா ஷகீலின் கூட்டாளிகள். இவர்கள் அனைவரும் சேர்ந்து உள்துறை அமைச்சர்அத்வானியைக் கொலை செய்யத் திட்மிட்டிருந்தனர். மேலும் மும்பை மற்றும் உத்திரப்பிரதேசத்தின் பல முக்கியநகரங்களில் வெடிகுண்டு வைக்கவும் இவர்கள் திட்மிட்டிருந்தனர்.
சரியான நேரத்தில் இவர்களைப் போலீசார் பிடித்ததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.
தற்செயலாகத்தான் சென்னைக்கு வந்தனர் - முத்துக்கருப்பன்
"கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளும் தற்செயலாகத்தான் சென்னைக்கு வந்தார்கள். மும்பை போலீசார் கொடுத்ததகவலின் அடிப்படையில்தான் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம். அந்தத் தீவிரவாதிகளுக்கும்சென்னைக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை" என்று சென்னை போலீஸ் கமிஷனர் இன்று (வியாழக்கிழமை)கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னையில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளும் உடனே மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் வெடிகுண்டு வைக்கும் திட்டம் அவர்களிடம் இல்லை. மேலும் வேறு யாரும் இதுபோன்றதீவிரவாதிகள் சென்னையில் நடமாடுகிறார்களா என்று அலசிப் பார்த்துவிட்டோம். அப்படி எதுவும் தகவல்இல்லை.
இவ்வாறு முத்துக்கருப்பன் கூறினார்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications