For Daily Alerts
Just In
ஏவுகணைத் தாக்குதலில் 100 ஆப்கானியர்கள் பலி
பெஷாவர்:
ஆப்கானிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்100 கிராம மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
அநேகமாக ஒரு ஏவுகணைதான் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதும் தலிபான் அரசு, ஜலாலாபாத் நகரம்தான்அமெரிக்காவின் தொடர் தாக்குதலில் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறியது.
கடாம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் வெளியே சென்றுவிட்டதால், அங்கிருந்த பெண்கள்,குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்தான் இத்தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கிராமத்திற்கு அருகிலேயே உள்ளதாகக் கருதப்படும் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்குதலுக்குப்பதிலாகத்தான், தவறுதலாக இந்தக் கிராமத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கியுள்ளன என்றும் தகவல்கள்கூறுகின்றன.
Comments
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]