வெளிநாட்டு அலுவலகங்களை மூடுகிறது ஏர்-இந்தியா
டெல்லி:
ஏர் இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் செலவை கட்டுப்படுத்த 142ஊழியர்களை நீக்கவும், அயல்நாட்டில் செயல்பட்டுவரும் அலுவலகங்களை மூடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்துவெளிநாடுகளில் செயல்பட்டு வரும் 20 ஏர் இந்தியா அலுவலகங்களை மூடுவது என்றும்,142 பணியாளர்களை பணிநீக்கம் செய்வது என்றும் முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 21 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துஅமெரிக்கா செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடட்டதையடுத்துஇந்த முடிவை மத்திய விமானத்துறை அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன் எடுத்துள்ளார்.
இது குறித்து விமானத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியாதாவது:
வெளிநாடுகளில் ஏர் இந்தியாவுக்கு 34 ஆப்-லைன் அலுவலகங்கள் உள்ளன. இதில் 20அலுவலகங்கள் மூடப்படுகின்றன. இதில் 76 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில்52 பேரை பணி நீக்கம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வருடம் ஒன்றக்கு ரூ 7கோடி மிச்சமாகும்.
அதே போல உலகம் முழுவதும் ஏர்-இந்தியாவுக்கு 33 ஆன்-லைன் அலுவலகங்கள்உள்ளன. இதில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியாளர்களில் 90 பேரை இரண்டு கட்டமாக பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியாமுடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ 14 கோடி செலவு மிச்சமாகும்.