For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்த்ராக்ஸ் பயம்: தமிழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி விடாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 3 பேர் ஆந்த்ராக்ஸ் தாக்கி இறந்துவிட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில் கர்நாடகமாநிலம் கோலார் மாவட்டத்திலும் 2 பேருக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரைப் பறித்துள்ளது.

தமிழக-கர்நாடக எல்லையில் கோலார் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இந் நோய் பரவி விடாமல்தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்துகள் அனுப்பப்பட்டுவருகின்றன. மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஆந்த்ராக்ஸ் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்யுமாறு தமிழக விளம்பரத்துறைக்கும் நலத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்துகளை உடனடியாக தயாரிக்குமாறு பல மருந்து நிறுவனங்ளுக்கும் தமிழக அரசுஆணையிட்டுள்ளது.

இன்று நடந்த அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்களின் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அரசுக்குபரிந்துரைக்கப்பட்டன. இதை ஏற்று அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஆந்த்ராக்ஸ் நோய்த் தடுப்பு பிரிவுகளைஉருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X