24 மணி நேரத்தில் 200 பேர் பலி: தலிபான் தகவல்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் 200க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையை ஒட்டிய கடாம் கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்கவிமானங்கள் பயங்கரமான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தின.

இந்தக் குண்டு வீச்சில் கிராமம் முழுவதுமே கிட்டத்தட்ட தரைமட்டமானது. மேலும் இத்தாக்குதலில் 200க்கும்மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் நிர்வாகம் கூறியுள்ளது.

இதுவரை 160 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்தான் என்றும் தலிபான் கூறியது.

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது தலிபான் நிர்வாகம். மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்களும்ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை ஆரம்பித்ததிலிருந்தே, அமெரிக்கா இந்தக் கிராமத்தைத்தான்தொடர்ந்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில்தான் ஒசாமா பின் லேடன் தலைமையிலான தீவிரவாதிகள்பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் அமெரிக்க படையினர் இங்கு தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+